நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப் பூண்
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ
வஞ்சனையின்றி பகையின்றிச் சூதின்றி வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .
"நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்கும்" என்றே உலகேழும் அறைந்திடுவாய் முரசே .
சொல்லத் தகுந்த பொருளில்லை காண் இங்கு சொல்லுமவர் தனையே
அல்லல் கெடுத்தமரர்க் கிணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .
நம்புவதே வழி என்ற மறை தனை நாமின்று நம்பிவிட்டோம்
கும்பிட் டென்நேரமும் சக்தி என்றாலுனைக் கும்பிடுவேன் மனமே
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சம் இல்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .
பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு போற்றி உனக்கிசைத்தோம்
அன்னை பராசக்தி என்றுரைத்தோம் தளை அத்தனையும் களைந்தோம்
சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறில்லை காண்
இன்னுமதே உரைப்போம் சக்தி ஓம் சக்திஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருளாக விளங்கிடுவாய்
தெள்ளு கலைத் தமிழ் வாணி நினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன்
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராது என்றன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல்.
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ
வஞ்சனையின்றி பகையின்றிச் சூதின்றி வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .
"நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்கும்" என்றே உலகேழும் அறைந்திடுவாய் முரசே .
சொல்லத் தகுந்த பொருளில்லை காண் இங்கு சொல்லுமவர் தனையே
அல்லல் கெடுத்தமரர்க் கிணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .
நம்புவதே வழி என்ற மறை தனை நாமின்று நம்பிவிட்டோம்
கும்பிட் டென்நேரமும் சக்தி என்றாலுனைக் கும்பிடுவேன் மனமே
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சம் இல்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .
பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு போற்றி உனக்கிசைத்தோம்
அன்னை பராசக்தி என்றுரைத்தோம் தளை அத்தனையும் களைந்தோம்
சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறில்லை காண்
இன்னுமதே உரைப்போம் சக்தி ஓம் சக்திஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருளாக விளங்கிடுவாய்
தெள்ளு கலைத் தமிழ் வாணி நினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன்
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராது என்றன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல்.
THANKS for your information! i changed that plant Photo!
ReplyDelete