இன்னிசையின் இனிமை நீ ! இதமான
இசையின் நாதம் நீ ! பண்ணும் நீயே!
மலர்களில் மணமும் நீ ! மனத்தை கவர்கின்ற
பலப் பல வண்ணமும் நீ ! வடிவமும் நீயே!
ஆழ்கடலின் அமைதி நீ ! ஆதார
ஒலியான பிரணவம் நீ ! சுருதியும் நீயே!
எல்லை இல்லா அருள் புரிந்தெமைக் காக்கும்
எந்தன் தாய் நீயே ! எல்லாம் நீயே !
சுடர் விளக்கின் ஒளி கொண்ட விழியாலே
எந்தன் தாய் என்னை நீ கனிவாய் பாராய்!
சிந்தையைத் தெளிய வைத்து சீரிய எண்ணம்;
சிறப்பான செயல் வண்ணம் அனைத்தும் தாராய்!
வானத்து மழை போலே வந்து நின்று
வேதனைகள் துடைத்து வெற்றி அளிப்பாய் !
வளமனைத்தும் பெற்ற வாழ்வை வழங்கும்
வள்ளல் நீ உன்னை என்றும் மறவேன்.
அம்மையும் நீ ! அப்பனும் நீ ! ஆதியான அண்டம் நீ !
அகிலம் நீ ! அனைத்தும் நீயே!
ஆதார சீவனும் நீ! ஆருயிரும் நீ!
ஆறாதாரம் ஆன சக்கரமும் நீ!
நிலமும் நீ! நீரும் நீ! நெருப்பும் நீ!
காற்றும் நீ ! நெடிய வானமும் நீயே!
அணுவினுள் அணுவாய் இருக்கும் தாயே!
அனைவரையும் நீ காத்திடுவாயே !
மெய்யான உடலொரு நாள் பொய்யாகும் ,மேதினியில்
மேலான உறவும் மறக்கும்
தொய்யாத கருமங்கள் தொடர்ந்து வரும் , செல்வம்
தூர நின்று கை காட்டி விடையும் கொடுக்கும்,
எய்யாத பிறவி எல்லாம் எதிர் நோக்கும் , என்னுயிரை
எத்தனையோ ஐயம் சூழும்
பொய்யாத நின் கருணைப் புது வெள்ளமா ட்கொள்ள
பூக்குமம்மா ஆனந்தம் என் மனத்துள்ளே.
வளர்கின்ற பருவத்தில் வார்த்தெடுத்த முத்தளித்து
வந்த வடு இன்றுமுண்டு.
தளர்கின்ற வயதினிலும் தள்ளாடும் நிலையினிலும்
தாங்கி நீயே பிடிப்பது உண்டு
கிளர்கின்ற போததனால் கேடொன்றும் சூழாது
காப்பதற்கு கருணை உண்டு
மலர்கின்ற பக்திக்கு அருள்கின்ற தாயே என்
மனத்தில் நீ என்றும் உண்டு.
காட்சிக்கு எளிதான கருத்துக்கு நிறைவான
காவியமே மகமாயி நீ.
ஆட்சிக்கு நீதானே அருள்வதுந்தன் விழிதானே
ஆதி அந்தம் அபிராமி நீ
சாட்சிக்கு சத்தியமே சாந்தியின் தரிசனமே
சாச்வதமே கருமாரி நீ
மாட்சிக்கு இலக்கணமே மீட்சிக்கு வழித்தடமே
தாட்சாயணி திரி சூலி நீ.
தணல் பட்ட புழுவாகத் தவித்திருந்த அடியேனைத்
தடுத்து ஆட்கொண்ட தாயே,
மனம் பட்ட பாட்டுக்கு மாற்றாகி சுகமானாய்
மஹா காளி கருணை நீயே,
தினம் கெட்டுத் திரிந்தவனின் நடை திருத்திச்
சீராகி திசை காட்டி நின்றாய் நீயே
கனல் பற்றக் கற்பூரம் கரையும் நிலை போலுன்
கருணை பற்றக் கரைந்தேன் நானே.
கவி பாடும் திறந்தந்தாய் கனிவான குரல் தந்தாய்
கருத் தரிக்கும் மனமும் தந்தாய்
அவை ஈர்க்கும் வரம் தந்தாய் அணியாக உறுத் தந்தாய்
அளவில்லாத பொருளும் ஈந்தாய்
குவிகின்ற கரத்தோடு கும்பிடும்போதென் முன்னே
கோதை நீ எழுந்து வந்தாய்
புவிமிசை சமயபுரம் தனி மலர் மாரித்
தாய் பொற்பதமே போற்றி போற்றி.
நாதாந்த மேலிருக்கும் ஞானச் செல்வி நாகமென
விளங்குகின்ற ஆதீ சக்தி,
வேதாந்த முடிச்சவிழ்க்க சுழி முனை தன்னில்
வேள்வி செய்து காத்திருக்கும் எளிஏனுக்குச்
சாதனையால் திட்டி தன் தாள் திறந்தங்கே
தக தகக்கும் நெருப்பாற்றைக் கடந்து செல்ல
வீதியாய் பாலம் அமைத்துத் தாராய்
விண் மண்ணை இணைக்க வல்ல கருணை மாரி.
இசையின் நாதம் நீ ! பண்ணும் நீயே!
மலர்களில் மணமும் நீ ! மனத்தை கவர்கின்ற
பலப் பல வண்ணமும் நீ ! வடிவமும் நீயே!
ஆழ்கடலின் அமைதி நீ ! ஆதார
ஒலியான பிரணவம் நீ ! சுருதியும் நீயே!
எல்லை இல்லா அருள் புரிந்தெமைக் காக்கும்
எந்தன் தாய் நீயே ! எல்லாம் நீயே !
சுடர் விளக்கின் ஒளி கொண்ட விழியாலே
எந்தன் தாய் என்னை நீ கனிவாய் பாராய்!
சிந்தையைத் தெளிய வைத்து சீரிய எண்ணம்;
சிறப்பான செயல் வண்ணம் அனைத்தும் தாராய்!
வானத்து மழை போலே வந்து நின்று
வேதனைகள் துடைத்து வெற்றி அளிப்பாய் !
வளமனைத்தும் பெற்ற வாழ்வை வழங்கும்
வள்ளல் நீ உன்னை என்றும் மறவேன்.
அம்மையும் நீ ! அப்பனும் நீ ! ஆதியான அண்டம் நீ !
அகிலம் நீ ! அனைத்தும் நீயே!
ஆதார சீவனும் நீ! ஆருயிரும் நீ!
ஆறாதாரம் ஆன சக்கரமும் நீ!
நிலமும் நீ! நீரும் நீ! நெருப்பும் நீ!
காற்றும் நீ ! நெடிய வானமும் நீயே!
அணுவினுள் அணுவாய் இருக்கும் தாயே!
அனைவரையும் நீ காத்திடுவாயே !
மெய்யான உடலொரு நாள் பொய்யாகும் ,மேதினியில்
மேலான உறவும் மறக்கும்
தொய்யாத கருமங்கள் தொடர்ந்து வரும் , செல்வம்
தூர நின்று கை காட்டி விடையும் கொடுக்கும்,
எய்யாத பிறவி எல்லாம் எதிர் நோக்கும் , என்னுயிரை
எத்தனையோ ஐயம் சூழும்
பொய்யாத நின் கருணைப் புது வெள்ளமா ட்கொள்ள
பூக்குமம்மா ஆனந்தம் என் மனத்துள்ளே.
வளர்கின்ற பருவத்தில் வார்த்தெடுத்த முத்தளித்து
வந்த வடு இன்றுமுண்டு.
தளர்கின்ற வயதினிலும் தள்ளாடும் நிலையினிலும்
தாங்கி நீயே பிடிப்பது உண்டு
கிளர்கின்ற போததனால் கேடொன்றும் சூழாது
காப்பதற்கு கருணை உண்டு
மலர்கின்ற பக்திக்கு அருள்கின்ற தாயே என்
மனத்தில் நீ என்றும் உண்டு.
காட்சிக்கு எளிதான கருத்துக்கு நிறைவான
காவியமே மகமாயி நீ.
ஆட்சிக்கு நீதானே அருள்வதுந்தன் விழிதானே
ஆதி அந்தம் அபிராமி நீ
சாட்சிக்கு சத்தியமே சாந்தியின் தரிசனமே
சாச்வதமே கருமாரி நீ
மாட்சிக்கு இலக்கணமே மீட்சிக்கு வழித்தடமே
தாட்சாயணி திரி சூலி நீ.
தணல் பட்ட புழுவாகத் தவித்திருந்த அடியேனைத்
தடுத்து ஆட்கொண்ட தாயே,
மனம் பட்ட பாட்டுக்கு மாற்றாகி சுகமானாய்
மஹா காளி கருணை நீயே,
தினம் கெட்டுத் திரிந்தவனின் நடை திருத்திச்
சீராகி திசை காட்டி நின்றாய் நீயே
கனல் பற்றக் கற்பூரம் கரையும் நிலை போலுன்
கருணை பற்றக் கரைந்தேன் நானே.
கவி பாடும் திறந்தந்தாய் கனிவான குரல் தந்தாய்
கருத் தரிக்கும் மனமும் தந்தாய்
அவை ஈர்க்கும் வரம் தந்தாய் அணியாக உறுத் தந்தாய்
அளவில்லாத பொருளும் ஈந்தாய்
குவிகின்ற கரத்தோடு கும்பிடும்போதென் முன்னே
கோதை நீ எழுந்து வந்தாய்
புவிமிசை சமயபுரம் தனி மலர் மாரித்
தாய் பொற்பதமே போற்றி போற்றி.
நாதாந்த மேலிருக்கும் ஞானச் செல்வி நாகமென
விளங்குகின்ற ஆதீ சக்தி,
வேதாந்த முடிச்சவிழ்க்க சுழி முனை தன்னில்
வேள்வி செய்து காத்திருக்கும் எளிஏனுக்குச்
சாதனையால் திட்டி தன் தாள் திறந்தங்கே
தக தகக்கும் நெருப்பாற்றைக் கடந்து செல்ல
வீதியாய் பாலம் அமைத்துத் தாராய்
விண் மண்ணை இணைக்க வல்ல கருணை மாரி.
No comments:
Post a Comment