மலரின் மேவு திருவே - நின்மேல் மையல் பொங்கி நின்றேன் ;
நிலவு செய்யும் முகமும் - காண்பார் நினைவழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் - தெய்வக் களி துலங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் - கண்டுன் இன்பம் வேண்டுகின்றேன்.
கமல மேவும் திருவே - நின் மேல் காதலாகி நின்றேன்;
குமரி நின்னை இங்கே பெற்றோர் கோடி இன்பம் உற்றார் ;
அமரர் போல வாழ்வேன் - என் மேல் அன்பு கொள் வையாயின்
இமய வெற்பின் மோத- நின் மேல் இசைகள் பாடி வாழ்வேன்.
வாணி தன்னை என்றும் - நினது வரிசை பாட வைப்பேன் ,
நாணி ஏகலாமோ ? - எனை நீ நன்கறிந்திலாயோ? .
பேணி வை யமெல்லாம் - நன்மை பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்தரெல்லாம் - கண்ணன் பொறிகள் ஆவரன்றோ ?
பொன்னு நல்ல மணியும் சுடர் செய் பூண்களேந்தி வந்தாய்
மின்னு நின்றன் வடிவில் - பணிகள் மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்பனேடி- திருவே! என்னுயிர்க்கொர் அமுதே!
நின்னை மார்பு சேரத் தழுவி நிகரிலாது வாழ்வேன்.
செல்வம் எட்டும் எய்தி - நின்னால் செம்மைஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை வாழ்வில் இல்லையாக வைப்பேன்;
முல்லை போன்ற முறுவல் காட்டி மோக வாதை நீக்கி
எல்லை யற்ற சுவையே - எனை நீ என்றும் வாழ வைப்பாய்.
நிலவு செய்யும் முகமும் - காண்பார் நினைவழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் - தெய்வக் களி துலங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் - கண்டுன் இன்பம் வேண்டுகின்றேன்.
கமல மேவும் திருவே - நின் மேல் காதலாகி நின்றேன்;
குமரி நின்னை இங்கே பெற்றோர் கோடி இன்பம் உற்றார் ;
அமரர் போல வாழ்வேன் - என் மேல் அன்பு கொள் வையாயின்
இமய வெற்பின் மோத- நின் மேல் இசைகள் பாடி வாழ்வேன்.
வாணி தன்னை என்றும் - நினது வரிசை பாட வைப்பேன் ,
நாணி ஏகலாமோ ? - எனை நீ நன்கறிந்திலாயோ? .
பேணி வை யமெல்லாம் - நன்மை பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்தரெல்லாம் - கண்ணன் பொறிகள் ஆவரன்றோ ?
பொன்னு நல்ல மணியும் சுடர் செய் பூண்களேந்தி வந்தாய்
மின்னு நின்றன் வடிவில் - பணிகள் மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்பனேடி- திருவே! என்னுயிர்க்கொர் அமுதே!
நின்னை மார்பு சேரத் தழுவி நிகரிலாது வாழ்வேன்.
செல்வம் எட்டும் எய்தி - நின்னால் செம்மைஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை வாழ்வில் இல்லையாக வைப்பேன்;
முல்லை போன்ற முறுவல் காட்டி மோக வாதை நீக்கி
எல்லை யற்ற சுவையே - எனை நீ என்றும் வாழ வைப்பாய்.
No comments:
Post a Comment