மோகத்தைக் கொன்றுவிடு - அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு.
தேகத்தைச் சாய்த்து விடு - அல்லால் அதில்
சிந்தனை மாய்த்துவிடு.
யோகத்திருத்தி விடு - அல்லால் என்றன்
உனைகச் சிதைத்து விடு.
ஏகத் திருந்துலகம் - இங்குள்ளன
யாவையும் காப்பவளே!
பந்தத்தை நீக்கி விடு - அல்லால் உயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு.
சிந்தை தெளிவாக்கு - அல்லால் இதைச்
செத்த உடலாக்கு.
இந்தப் பதர்களையே - நெல்லாமென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
இயங்கி இருப்பவளே.
உள்ளம் குளிராதோ? - பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம்உருகாதோ? அம்மா பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற கரியவளே - அனைத்திலும்
மேவி இருப்பவளே.
மூச்சை நிறுத்திவிடு.
தேகத்தைச் சாய்த்து விடு - அல்லால் அதில்
சிந்தனை மாய்த்துவிடு.
யோகத்திருத்தி விடு - அல்லால் என்றன்
உனைகச் சிதைத்து விடு.
ஏகத் திருந்துலகம் - இங்குள்ளன
யாவையும் காப்பவளே!
பந்தத்தை நீக்கி விடு - அல்லால் உயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு.
சிந்தை தெளிவாக்கு - அல்லால் இதைச்
செத்த உடலாக்கு.
இந்தப் பதர்களையே - நெல்லாமென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
இயங்கி இருப்பவளே.
உள்ளம் குளிராதோ? - பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம்உருகாதோ? அம்மா பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற கரியவளே - அனைத்திலும்
மேவி இருப்பவளே.
No comments:
Post a Comment