Wednesday, 16 May 2012

காளி வாழ்த்து

அன்பு பொங்கிடும்  ஆரணி வாழிய
ஆசி  நல்கிடும் நாரணி  வாழிய
இன்பம் தந்திடும் இந்த்ராணி வாழிய  என்றே பணிந்தேனே .

ஈசனுடன் இணை ஈஸ்வரி வாழிய
உலகை ஆளும் உமையே நீ வாழிய
ஊழ்வினை நீக்கும் ஊர்வசி வாழிய  என்றே பணிந்தேனே .

எங்கும் நிறைந்திடும் எழிலி நீ வாழிய
ஏற்றம் கொடுக்கும் ஏகாம்பரி வாழிய
ஐம்பூதம் தன்னுள் அடக்கியவள் வாழி என்றே பணிந்தேனே.

ஒண்பொருள் தரும் ஒய்யாரி வாழிய
ஓதாது உணர்த்திடும் ஓங்காரி வாழிய
அவ்வியம் தீர்க்கும் அன்னை நீ வாழிய  என்றே பணிந்தேனே.

பாதி உடலீந்த பரமருடன் வந்து
பாவமே புரி அடியேனுக்கருள் செய்து
மேவும் வினையினை பஞ்சாய் பறக்கச் செய்ய வருவாயே .

கரங்களில் கொல்லும் ஆயுதம் தாங்கியே
சிரம் ஒன்றும் பொற்கரந்தனில் ஏந்தியே
வரங்களை வகை இன்றி வழங்கிட வருவாயே .

கண்களில் மின்னும் உன்னுருவம் காட்டி
தண்ணெனும் மலர்ப் பாதம் தலை சேர்த்தி
மண்ணில் நல்வண்ணம் வாழ வழிவகை  செய் தாயே

நாணல் போல் வளைந்தாடும் இடை உடை
பாணம் ஐந்தும் கைக்கொன்டு  நின்றனை
வானவர் போற்றும் வாழ்வை வழங்கினை காளி நீயே .









No comments:

Post a Comment